ஒட்டப்பிடாரம் வெள்ளப்பட்டியில் புதிய நியாய விலை கடை - சண்முகையா எம்எல்ஏ யூனியன் சேர்மன் ரமேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ அரசடி ஊராட்சி வெள்ளப்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் வசந்தி வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி வருவாய் ஆய்வாளர் வாசுகி கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ் பங்குத்தந்தை அருட்தந்தை.வினித்ராஜ் ஊராட்சி மன்ற தலைவர் ராயப்பன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜேசுதாஸ் ஒன்றிய மீனவரணி துணை அமைப்பாளர் தேவ சகாயராஜ் கிளைச் செயலாளர் ஆலோசனை மரியான் கிளை பிரதிநிதி அருள்சாமி மகளிர் அணி அன்னம்மாள் பாக்கியம் ஊர் நிர்வாகி அந்தோணி ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.