பேரூரணி சிறைச்சாலை காவலர் பயிற்சி பள்ளியில் சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பேரூரணி சிறைச்சாலை  காவலர் பயிற்சி பள்ளியில் சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி தாலுகா பேரூரணியில் அமைந்துள்ள மாவட்ட சிறைச்சாலை மற்றும் காவலர் பயிற்சி பள்ளியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் பார்வையிட்டு சிறைச்சாலை மற்றும் காவலர் பயிற்சி பள்ளிக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் போது சிறைச்சாலை ஆய்வாளர் அப்துல்ரஹீம் காவலர் பயிற்சி பள்ளி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹெகோட்ராஜா உதவி பொறியாளர் பிரான்சிஸ்கோ காவலர் வீட்டு வசதி வாரிய பொறியாளர் தங்கலட்சுமி வருவாய் ஆய்வாளர் அனிதா ஒன்றிய கழக செயலாளர்கள் சுப்பிரமணியன் சுரேஷ்காந்தி ராமசாமி ஒன்றிய கழக துணை செயலாளர்கள் ஹரி பாலகிருஷ்ணன் நாராயணன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் முடிவை ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.