தூத்துக்குடி மாநகராட்சி சுந்தரவேல்புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுந்தரவேல்புரத்தில் இன்று (30.04.2025) L&T நிறுவனத்தின் பிரயாஸ் டிரஸ்ட் மூலமாக சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.21 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், முன்னிலையில் திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி திமுக மாநகர செயளாலர் ஆனந்த சேகரன்,எல் & டி நிறுவனத்தின் பிரயாஸ் டிரஸ்ட் தலைவர் மீனா சுப்ரமணியம், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, திட்ட அலுவலர் (பொ) காயத்ரி, தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், மாமன்ற உறுப்பினர்கள் நாகேஸ்வரி அவர்கள்,பவானி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (நகர்ப்புறம்) ரூபி பெர்ணான்டோ, அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.