மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமையில் பொங்கல் விளையாட்டு போட்டி!

தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூ பாண்டிபுரம், விவேகானந்தாநகர், இந்திராநகர்,தாளமுத்துநகர், கிழக்கு காமராஜர்நகர், தாய்நகர், கீழஅழகாபுரி, ஜேஜே நகர், கணேசபுரம் என பல்வேறு பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமையில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கி தலைவர் மாப்பிள்ளயூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணகுமார் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, திமுக இளைஞர் அணி ஆனந்த், ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் கெளதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.