வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் பேவர் பிளாக் சாலையை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள வடக்கு சோட்டையன் தோப்பு இரட்சணிய சேனை ஆலய தெரு பொதுமக்கள் எங்கள் வாழ்நாளில் சாலை பார்த்ததே இல்லை புதியதாக இப்பகுதி மக்களுக்கு பேவர் பிளாக் சாலை குடிதண்ணீர் குழாய் மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இரட்சணிய சேனை ஆலய தெரு முழுவதும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு புதிய குடிதண்ணீர் குழாய் அமைக்கப்பட்டு மின்விளக்கு உள்ளிட்ட புதிய அடிப்படை தேவைகளை மாப்பிள்ளையூரணி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட திறப்பு விழா நிகழச்சிக்கு  கூட்டுறவு கடன்சங்க தலைவரும் தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய  செயலாளருமான சரவணக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

பின்னர் ஊர் கூட்டத்தில் இந்த பகுதிக்கு பல தலைவர்கள் உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்தும் எங்கள் கோரிக்கையை யாரும் நிறைவேற்றி தராத நிலையில் மக்கள் நலன் தான் எனக்கு முக்கியம் என்று தினமும் முதலமைச்சர் ஸ்டாலின் எப்படி சிந்தித்து செயல்பட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்பதை போல் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் இந்த பகுதி வளர்ச்சிக்கு மக்களோடு மக்களாக பழகி எங்களை போன்ற பகுதி மக்கள் வைக்கும் கோரிக்கைகளையும் குறைகளையும் கேட்டறிந்து முழுமையாக செய்து கொடுத்து வருவதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரித்து, பெலிக்ஸ், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் மைக்கேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அர்ஜுன், மற்றும் கௌதம், உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.