முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 25 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு 3000 பேருக்கு அன்னதானம்.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 25 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு மற்றும் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி 8 வது வார்டு ஜோதிபாசு நகரில் திமுக சார்பில் 25 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு அன்னதானம், வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் ஆணைக்கிணங்க அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அன்னதான நிகழ்ச்சி வளைகாப்பு நிகழ்ச்சி செய்திடவும் அறிவுறுத்தி இருந்தார்.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஜோதிபாசு நகரில் இன்று 25 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்து வைத்து சீர்வரிசை பொருள்களையும் ஐந்து வகையான உணவுகளையும் வழங்கியும் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோனி தனுஸ்பாலன்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, அனந்தி, வசந்த குமாரி, சரஸ்வதி முருகன், சண்முகத்தாய் ஞானராஜ், வீரக்குமார், சந்திர சேகர், முனியம்மாள், ஜோதி பாசு நகர் தொழிலதிபர் மாரியப்பன், 8 வது வார்டு கிளை செயலாளர் வேல்ராஜ், இளைஞர் அணி கெளதம் தூத்துக்குடி முன்னாள் ஒன்றிய செயலாளர் மைக்கேல் ராஜ், துணை செயலாளர் கணேசன் மற்றும் 8 வது வார்டு கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.