தூத்துக்குடி மாவட்டம் எப்போது வென்றான் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய எட்டயபுரம் அதிமுக நகர கழகச் செயலாளர் ராஜகுமார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா எப்போதும் வென்றானில் வசித்து வரும் 80 வயது மூதாட்டி கனமழை வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் அந்த மூதாட்டிக்கு அரிசி,மளிகை பொருட்கள்,காய்கறி, மற்றும் மருத்துவ உதவிக்கு பணம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
மழை வெள்ளத்தில் பதிக்கப்பட்ட எங்களை யாரூமே வந்து பார்க்கவில்லை மழைநீர் வீட்டுக்குள் வந்து தடுமாறி விழுந்ததில் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது என குற்றச்சாட்டையும். எனவே தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க மூதாட்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.