தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளில் மூலம் சுமார் ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்- எம்பி கனிமொழி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளில் மூலம் சுமார் ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளி கல்வித்துறை வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட துறையில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு துணைத்தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 1500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்ட ஆணைகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், பார்வையற்றோர் காது கேளாருக்கு செல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளை வழங்கினார் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் சரிசமமாக நடத்திய நான்கு ஊராட்சிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் காசோலையை கனிமொழி எம்பி வழங்கினார்.
அதேபோல் வருவாய் துறை சார்பில் கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு ஆணைகளை வழங்கினார் மேலும் வேளாண்மை துறை சார்பில் சிறப்பாக பட்டு பூச்சி வளர்ப்பில் சிறந்த விவசாயிகளுக்கு சிறந்த பரிசுகளையும் வழங்கினார்.
இன்று மட்டும் சுமார் ஒரு கோடியை 64 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை கனிமொழி எம்பி வழங்கி பேசியபோது மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்து அதற்காக தனி துறையை அமைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் வழியிலேயே தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் மாற்று திறனாளிகள் நலத்துறையை அவரும் தன்னுடைய நேரடி பார்வையில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.
அண்மையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கி உள்ளார் எனவும் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பட்டா வழங்க வேண்டும் என கேட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அடுத்த மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அனைவரும் சமம் என்ற நினைக்கக்கூடிய நிலை உருவாக வேண்டும் என்ற வகையில் தமிழக அரசு செயல் பட்டு வருகிறது ஜாதி என்பதை ஒழிக்க வேண்டும் என்பதே தந்த பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோரின் கனவாக உள்ளது ஜாதி பாகுபாடுகளை வேற்றுமைகளை களைந்து விட்டு அத்தனை பேரும் சமம் என நினைக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் காட்ட வேண்டும் அந்த வகையில் தான் சில பஞ்சாயத்துகளில் அனைத்தும் அனைவருக்கும் சமம் என்ற நிலையை உருவாக்கி உள்ளனர் என தெரிவித்தார் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் கனிமொழி எம்பி தெரிவித்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார்,தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்ம சக்தி,தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சிவசங்கரன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.