தூத்துக்குடி வழக்கறிஞர்களின் சங்கத்தின் சார்பாக வழக்கறிஞர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் - கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி வழக்கறிஞர்களின் சங்கத்தின் சார்பாக வழக்கறிஞர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் தூத்துக்குடி பிசிங் ஹார்பர் எதிர்ப்புறம் உள்ள ஆலையா இன்டோர் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டது.
இந்த போட்டியில் வழக்கறிஞர்கள் டேவிட் தனசேகர் அணி முதல் பரிசையும் வழக்கறிஞர் அசோக் அணி இரண்டாவது பரிசையும் வழக்கறிஞர் சுரேஷ்குமார் அணி மூன்றாவது பரிசையும் பெற்று வெற்றி பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் தாமி பிரபு, மற்றும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் பரிசு கோப்பையையும் சான்றிதழையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் செல்வின்,கிறிஸ்ங்கர், சின்னத்தம்பி,குமார்,கணேஷ், ராஜேஷ், விக்னேஷ்,சிவசங்கர்,செம்பா, ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.