இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தின்கீழ் வயது முதிர்வு உதவித்தொகையை சமூக நலத்துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் – சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தகீதா ஜீவன் இன்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்,மாநகராட்சி தெற்கு மண்டலத்தலைவர் பாலகுருசாமி, வட்டாட்சியர்கள் பிரபாகரன், ராஜலெட்சுமி,மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் பகுதி செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;
முதல்வரின் உத்தரவின் பேரில் சிறப்பான திட்டங்களில் ஒன்றான மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று சட்டமன்ற அலுவலகத்தில் 50 மாற்றுத்திறனாளிகள் பயண் பெறும் வகையில் மாதம் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வழங்கி உள்ளோம்.
கூடுதலாக முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்க வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி கூடுதலாக வழங்குமாறு கேட்டு இருக்கிறோம்.முதல்வரிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பதாகவும், உறுதி அளித்தார். அதன் மூலம் நம்முடைய மாவட்டத்தில் இன்னும் கூடுதலாக பயனாளிகள் பயன் பெறுவார்கள்.பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் பெற்று 18 வயது பூர்த்தி அடைந்த பெற்றோர்கள் இரண்டு பெண்கள் குழந்தைகள் திட்டத்தின் கீழ் பயன் பெறக்கூடிய பெண் குழந்தைகள் முதிர்வு உதவுத்தொகை பெறக்கூடிய
விண்ணப்பித்து வைத்திருக்க கூடிய பாண்டு பேப்பரை பெற்றோர்கள் சமூக நலத்துறை அலுவலகத்தில் நேரில் வந்து பாண்டு பேப்பரின் நகலை ஒப்படைத்து முதிர்வு உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
மாநிலம் விட்டு மாநிலம் சென்றவர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றவர்கள், மாவட்டத்திற்குள் வேறு ஒரு விலாசத்திற்கு சென்று இருப்பவர்கள், அனைவரும் இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய முதிர்வு உதவித்தொகையை அந்த அந்த மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் பாண்டு பேப்பரின் நகலை எடுத்து கொண்டு நேரடியாக சென்று உதவி தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் 10000 பேருக்கும் அதிகமாக இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறக்கூடிய நபர்கள் இருக்கிறார்கள். உதவித்தொகை கோரி விண்ணப்பம் செய்யக்கூடிய நபர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக பூர்த்தி செய்ய பட்டு வருகிறது.
இதுவரை இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் பதினெட்டு வயது பூர்த்தி அடைந்த வயது முதிர்வு உதவித்தொகைக்கு 281 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பட்டு தமிழக அரசு வழங்கி உள்ளது. இதுவரை பெண் குழந்தைகளுக்கான முதிர்வு உதவித்தொகையை பெறாத பெற்றோர்கள் உடனே அருகில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.