தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவியின் செயல்பாட்டை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் உள்ள செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகளுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாட்டை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவியின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடன் இணைந்து செவிலியர்களுக்கான பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது இங்கு படிக்கும் மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து தர வேண்டுமென கல்லூரி நிர்வாகத்தினர் அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து தனியார் பங்களிப்புடன் குடிநீர் சுத்திகரிப்பு மையம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டது இதைத்தொடர்ந்து இதன் செயல்பாடுகள் துவங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பெண்களுக்கான மார்பக புற்றுநோயை கண்டறியும் அதிநவீன கருவி நிறுவப்பட்டுள்ளது இதன் செயல்பாடுகளை துவங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் அதன் செயல்பாட்டை தொடங்கி வைத்து அது பயன்படுத்தும் முறை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சருக்கு கீதா ஜீவன் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கல்வியும் சுகாதாரமும் இரண்டு கண்கள் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் இதன் காரணமாகத்தான் மருத்துவமனைகளில் உள்கட்டவிப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் தான் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள் சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சிவகுமார் மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.