தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவியர்களின் சேர்க்கை அதிகரித்து வருகின்றது.

எனவே அதனை கருத்தில் கொண்டு மாநகராட்சிக்குப்பட்ட சிவந்தாகுளம் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள்  கட்டுமான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். 

ஆய்வின் போது சிவந்தாகுளம் தொடக்க பள்ளியில் புதிதாக ஷெட் அமைத்து தருமாறும், மேல் நிலை பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கும் கூடுதல் வகுப்பறை ஒன்று கட்டி தருமாறு கேட்டதன் அடிப்படையில் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தரப்படும் எனவும் அது மட்டுமல்லாது மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் எனவும் வரும் கல்வி ஆண்டில் கட்டப்படும் புதிய கூடுதல் வகுப்பறைகளை பயன்படுத்தலாம் எனவும் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது மண்டல தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா , மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார்,முன்னாள் மாமன்ற உறுப்பினர் பாலன், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ்,உதவியாளர் ஜேஸ்பர் உடன் இருந்தனர்.