தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் எம்பி கனிமொழி அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் 100 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியசாமி அறக்கட்டளை மற்றும் மகளிர் திட்டம் ஒருங்கிணைப்புடன் முள்ளக்காடு ஊராட்சி பொட்டல்காடு கிராமத்தில் 32 பெண்களுக்கு 40 நாட்கள் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டது .
மேலும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தையல் பயிற்சி பெற்ற 62 மகளிர்க்கும் திமுக சார்பில் தையல் பயிற்சி அளித்து ஆக மொத்தம்100 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார் காவல் துறையில் பெண்களும் பணிபுரியும் திட்டத்தையும் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார் இதுபோல் பெண்கள் கல்வியில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற வகையில் பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு வழங்கினார் இதன் மூலம் பெண் கல்வி உயர்ந்தது இதன் தொடர்ச்சியாக தான் தற்போது உயர் கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் இதன் காரணமாக பெண் கல்வி வளர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அதில் நீட்சியாக தான் தற்போது திராவிட மாடல் ஆட்சியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்பாக நடத்தி வருகிறார் என தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம் ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார், ராமகிருஷ்ணன்,வைதேகி, சரண்யா,மாநகர மருத்துவர் அணி அமைப்பாளர் அருண்குமார், மகேஸ்வரன் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
முன்னதாக கயத்தார் பகுதிக்கு உட்பட்ட அதிமுக அமமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் திமுகவில் இணைந்த அவர்களை இரு வண்ண துண்டு அணிவித்து கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.