ஒட்டப்பிடாரம் இளவேலங்காலில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி செயலாக்க கட்டிடம் கட்டும் பணிகளை எம்எல்ஏ சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் இளவேலங்கால் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 30.04 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டிடம் கட்டும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி உதவி பொறியாளர் பால நமச்சிவாயம் வருவாய் ஆய்வாளர் துரைசாமி கிராம நிர்வாக அலுவலர் கன்னிவேல் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்ரி ஊராட்சி செயலர் ராஜும களிரணி சுசிலா இளைஞரணி சிவகுமார் செல்வராஜ் கிளை செயலாளர் ரமேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.