வணிகர்களுக்கு எதிராக செயல்படும் கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் - தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் கடும் கண்டனம்!.

வணிகர்களுக்கு எதிராக செயல்படும் கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் - தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் கடும் கண்டனம்!.

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் நிறுவனத் தலைவர் சந்திரன் ஜெயபால் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் செய்தியாளரிடம்  பேசுகையில்;

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் அமைந்துள்ள நகராட்சி காய்கறி மார்க்கெட்டை நகராட்சி நிர்வாகம் வணிகர்களின் எதிர்ப்பை மீறி இடித்ததை வன்மையாக கண்டிக்கிறோம் . காய்கறி மார்க்கெட் வணிகர்கள் தாங்கள் சொந்தமாக வாங்கிய மார்க்கெட்டையும் மூடச்சொல்லி  வணிகர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தை தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் வன்மையாக கண்டிக்கிறது . 

திட்டக்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தனியார் இடத்தில் நடந்து வரும் இந்த மார்க்கெட்டை நம்பி ஆயிரக்கணக்கான வணிகர்களும் , தொழிலாளர்களும் , விவசாயிகளும் உள்ளனர் .இந்த காய்கறி மார்க்கெட்டை எந்த வித நெருக்கடியும் இல்லாமல் வணிகர்கள் சுதந்திரமாக தொடர்ந்து நடத்தி வர அனுமதிக்கவும் பாதுகாப்பு, மற்றும் ஒத்துழைப்பு தரவும் தமிழ்நாடு அரசுக்கு வணிகர்கள் மகாஜன சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து பேசிய அவர் மே ' 5 ' ம் தேதி 40 - வது வணிகர் தின கோரிக்கை மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெறவுள்ளது .

மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளவும் வணிகர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும் .சிறு வணிக கடைகளுக்கு மின்கட்டண சலுகை  பெட்ரோல் , டீசலை GST- க்கு உட்படுத்தக் கோருதல் , சொத்துவரி உயர்வை 50 % குறைக்கக் ஆன்லைன் வர்த்தகத்தை நெறிமுறைப்படுத்தி கலாச்சாரம் சார்ந்த தமிழக வணிகத்தை காக்கக்வும் கோரிக்கைகள் வைக்கப்படும், 

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மாநிலத் தலைவர் மாரித்தங்கம், தூத்துக்குடி மாநகர தலைவர் லிங்க செல்வன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் தாளமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 .