தூத்துக்குடியில் தேர்மாறன் கல்வறை வளாகத்தில் பாண்டியா பதி மன்னரின் வாரிசுதார் ஜோசப் லிகோரி அனஸ்தாசியுஸ் சந்திர மோத்தா கலந்து கொண்டு மன்னரின் கல்லறையில் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்.

குமரி முதல் ராமேஸ்வரம் வரையிலான முத்துக்குளித்துறை பகுதியை ஆட்சி புரிந்தவர் தொன் கபிரியேல் தெக்குருஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் என்கிற தேர்மாறன். இவர் ஆங்கிலேய அரசை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் சிவகங்கை மன்னர் மருதுபாண்டியர் சகோதரர்களுக்கு போரிட ஆயுதங்களை தனது கப்பல் மூலம் வரவழைத்தும் சுதந்திர போராட்டத்திற்கு பல்வேறு உதவிகளை செய்தவர்.
பாண்டியபதி 16ம் மன்னர் தொன் கபிரியேல் தெக்குருஸ் வாஸ் கோமஸ் தேர்மாறன் 272 ஆவது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடியில் தெலசால் தேர்மாறன் கல்வறை வளாகத்தில் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பரதர் நல சங்க முன்னாள் தலைவர் பீட்டர் பெர்னான்டோ தலைமை வகித்தார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரவீன், தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் சேனாதிபதி சின்னத்தம்பி முன்னிலை வகித்தனர். பாத்திமா நகர் பங்குத்தந்தை அருட்திரு ஜேசுதாஸ் ஆசியுரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக பாண்டியா பதி மன்னரின் வாரிசுதார் ஜோசப் லிகோரி அனஸ்தாசியுஸ் சந்திர மோத்தா கலந்து கொண்டு மன்னரின் கல்லறையில் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தேர்மாறன் கல்லறை மீட்பு குழு நிர்வாகிகள் அந்தோணிசாமி, இன்னாசி, பெல்லா, விஜயகுமார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரைட்டர், தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் கோல்டன் பரதர், தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி செவனர், மணவை ரூஸ்வெல்ட், அமல் அரசு, இந்திய மீனவர் சங்க மாவட்ட செயலாளர் பிரசாத், பரதவர் முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் ரோக் பெர்னான்டோ ஆகியோர் மன்னரின் கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செய்து புகழஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மன்னரின் வாரிசுதாரர் ஜோசப் லிகோரி அனஸ்தாசியுஸ் சந்திர மோத்தா மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரவீன் ஆகியோர் பேசுகையில்;
மன்னர் தேர்மாறனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைத்து, டிசம்பர் 13 ஆம் தேதி பிறந்த தினமாக அறிவித்து தேர்மாறனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சுதந்திர வீரர் தொன் கபிரியேல் தெக்குருஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் என்கிற தேர்மாறன் பெயரை சூட்ட வேண்டும்.
மத்திய அரசு பாண்டியாபதி தேர்மாறன் நினைவாக தபால் தலை வெளியிட வேண்டும்.
தூத்துக்குடியில் பாண்டியாபதி தேமாறன் வாழ்ந்த பகுதியான கடற்கரை சாலைக்கு மன்னர் பாண்டியாபதி தேர்மாறன் சாலை என மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி பெயர் சூட்ட வேண்டும் என தெரிவித்தனர்.
விழாவில் தமிழக மீனவ மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ராஜசேகர் பர்னாந்து, நிர்வாகிகள் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெமி வி ராயர், தூத்துக்குடி மாவட்ட பிரதிநிதி குமார், பொதுக்குழு உறுப்பினர் ஞானராஜ் கோமஸ், ஊடகப்பிரிவு நிர்வாகி ராயர் பரதர், இந்தியர் மீனவர் சங்க மாவட்ட செயலாளர் பிரசாத், மாவட்ட தலைவர் ஜேசுராஜா, நிர்வாகிகள் சுமன், விக்னேஷ், நியூட்டன், அஸ்மிலன், அதிஷ்டன், பரதவர் முன்னேற்ற பேரவை மாவட்ட செயலாளர் வார்னர், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலன், மாவட்ட துணைத் தலைவர் பிரேம் குமார் மற்றும் நரிப்பையூர், ரோச்மா நகர் பரதர் ஊர் கமிட்டி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு மன்னர் தேர்மாறனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.