தூத்துக்குடியில் தமிழ்நாடு ஹச் எம் எஸ் உழைப்பாளர் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு!

இந்த விழாவிற்கு ஹச் எம் எஸ் உழைப்பாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜலட்சுமி தலையிலும் தமிழ்நாடு ஹச் எம் எஸ் தலைவர் ராஜ்குமார், முன்னிலையும் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி தமிழ்நாடு ஹச் எம் எஸ் உழைப்பாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி தமிழ்ச்சாலை ராஜாஜி பூங்கா முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி டிஎஸ்பி சத்யராஜ் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
கோடை காலம் ஆரம்பமாக இருக்கும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் பொதுமக்களின் நிலை கருதி ஹச் எம் எஸ் உழைப்பாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் பொது மக்களுக்காக நீர் மோர் பந்தல் அமைத்து வெயிலில் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி 22 /03/ 23 இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர் ஓம் சக்தி சங்கர் ஜி, பொருளாளர் பெஸ்ஸி நிர்மல், ஒருங்கிணைப்பாளர் நிர்மல், பொருளாளர்(HMS) காந்தி சேகர், தொகுதி செயலாளர் கனகு, ஜாகிர் உசைன், கண்ணன், துணைச் செயலாளர்கள் செல்வம், ஜெஸ்வின், சாதிக் பாட்ஷா, அழகுராஜ், இளைஞர் அணி பிரசன்னா, பிரேம், சுப்புராஜ், ஜெஸ்பர்,அருண் ராஜ், ஹர்ஷ்வந்தன், டேனியல், மகளிர் அணியினர் திவ்யா,சூரியகலா, சந்திரமணி,காமாட்சி, மாலதி, ராஜேஸ்வரி, ஹரினி, கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.