தூத்துக்குடியில் மாற்று கட்சியினர் 75 க்கும் மேற்பட்ட நபர்கள் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியம்.

தூத்துக்குடியில் மாற்று கட்சியினர் 75 க்கும் மேற்பட்ட நபர்கள்  மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியம்.

தூத்துக்குடி,தமிழக வெற்றிக் கழகத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாற்று கட்சியினர் 75 பேர் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெரு தனியார் மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் தூத்துக்குடியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ராபின்ஸ்டன், பெஸ்ஸி ஆகியோர் ஏற்பாட்டில் 50 பெண்கள் உட்பட 80 க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் மகளிர் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

விழாவில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பேசுகையில் ; தளபதி விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய தினம் நமது கட்சியில் இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்து ஒற்றுமையுடன் கட்சி பணிகளை செய்து தளபதி விஜய் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிறைவாக ஸ்டெல்லா நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் அபர்ணா, ஆனந்தி , சந்தனமாரி, லெட்சுமி உட்பட மகளிர் சுய உதவி குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.