TUTY நிகழ்வு டாட் காம் சார்பில் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

TUTY நிகழ்வு டாட் காம் சார்பில் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

பொங்கல் தமிழர்களின் தொன்மையான பண்டிகை . பொங்கல் திருவிழா என்பது சங்க காலத்திலிருந்தே தமிழ் மக்களால் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள் ஆகும்.இந்த நன்னாளில் மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்கள்.தைத்திருநாளில் சூரியன் உதிக்கின்ற வேளையில் பொங்கலிட்டு தமது நன்றியினை வெளிக்காட்டுக்கின்றனர்.இதில் விவசாயிகள் மட்டுமின்றி ஒவ்வொரு மனிதனும் சூரியனுக்காக நன்றி கூறும் நாளாக இந்த நாள் தொன்றுதொட்டு கொண்டாடப்படுகிறது .

"ஆடிப் பட்டம் தேடி விதை" என்பது விவசாயிகளின் பழங்கால பொன்மொழி ஆகும்.தை மாதமானது பயிர்களை ஆடி மாதத்தில் விதை விதைத்து அந்த பயிர்களின் விளைச்சலினை அறுவடை செய்யும் பருவமாகும். அந்த அறுவடையின் மூலம் கிடைக்கின்ற நெல்லிலிருந்து எடுக்கப்படுகின்ற முதல் அரிசியில் சர்க்கரை ,பால்,நெய் சேர்த்து புதுப் பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கும்,மாட்டுக்கும் படைத்து நன்றி விழாவே தை கூறும் தைப்பொங்கல் திருவிழாவாகும். மாதத்தில் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவானது முதல் நாளில் சூரியப்பொங்கல், இரண்டாம் நாளில் மாட்டுப்பொங்கல், மூன்றாம் நாளில் காணும் பொங்கல் என்று தமிழர்களால் ஆண்டு தோறும் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகின்றனர் .

தாவரங்கள் , உழவு கருவிகள் மற்றும் பசுக்களுக்கு உயிர் கொடுத்த சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் இந்நாளில் மக்கள் கடவுளை மட்டுமின்றி இயற்கை மற்றும் விவசாயத்திற்கு உதவும் உயிரினங்களையும் வணங்குகின்றனர். இந்த பொங்கல் திருநாலானது ஜாதி, மத,இன பாகுபாடின்றி கொண்டாடப்படுகிறது.பொதுவாக ஆண்டுதோறும் ஜனவரி இரண்டாம் வாரம் தொடங்கும் பொங்கல் விழா, முன்று நாட்களும் கோலாகலமாக நடைபெறும்.