தூத்துக்குடியில் தொடர் மழை காரணமாக ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி ஸ்பிக் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற சண்முகையா எம்எல்ஏ நடவடிக்கை.

தூத்துக்குடியில் தொடர் மழை காரணமாக ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி ஸ்பிக் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற சண்முகையா எம்எல்ஏ நடவடிக்கை.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி ஸ்பிக் நகர் பகுதியில் நேற்று இரவு முதல் ஆரம்பித்து பகலிலும் தொடர் மழையால் 55,56,57,58 வார்டுகளுக்குட்பட்ட பாரதி நகர்,குமாரசாமி நகர், முள்ளக்காடு, நேசமணி நகர், காந்தி நகர், சவேரியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் மழை நீர் தேங்கிய பகுதிகளை  ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் தேங்கியுள்ள மழை நீரை விரைவாக வெளியேற்றுவதற்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வண்ணம் அனைத்துத்துறை அதிகாரிகளும் செயல்படுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.

 இதில் மாநகராட்சி பொறியாளர் ராஜபாண்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உமையருபாகம் உதவி பொறியாளர் பகவதி பகுதி செயலாளர் ஆஸ்கர் வட்டச் செயலாளர்கள் கருப்பசாமி பாலமுருகன் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மகளிரணி கல்பனா பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.