தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அத்துமீறும் ஆளுநரையும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!.

தூத்துக்குடி பிப்ரவரி 08
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அத்துமீறும் ஆளுநரையும் ஒன்றிய அரசையும் கண்டித்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டு மாநில உரிமைகள் மீதான தாக்குதலையும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி பகிர்வை வஞ்சிப்பதாகவும் இ டி,ஐ டி, போன்ற ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்கட்சி தலைவர்களை பழிவாங்குவதாகவும் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் ஆளுநரையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
செய்தியாளர்களை சந்தித்த எம் எல் ஏ சண்முகையா பேசுகையில்;
மத்தியிலே ஆளக்கூடிய ஒன்றிய பாஜக அரசு தமிழகத்துக்கு கிடைக்க கூடிய நிதி நிலைகளையும் சமீபத்தில் நடந்த வரலாறு காணாத இயற்கை பேரிடர் மழை வெள்ளத்தின் காரணமாக 26 ஆயிரம் கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒன்றிய பாஜக அரசுக்கு கடிதம் மூலமாக தெரிவித்தும் இதுவரை எந்த நிதியும் வழங்கப்படவில்லை தமிழகத்தை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது இதனை கண்டித்து தான் இந்தியா கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது மேலும் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டியும் நிலுவையில் உள்ளது அதைக் கண்டித்து தான் இந்த ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டம் நிச்சயமாக வெற்றி அடையும் மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி கட்டில் ஏறும் தமிழகம் புதுச்சேரி உள்பட 40க்கு 40 என்ற இலக்கை நிச்சயமாக வென்று ஒன்றிய பாஜக அரசை வீட்டிற்கு அனுப்புவோம் என ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தெரிவித்தார்.
இதில் தூத்துக்குடி திமுக மாநகர செயளாலர் ஆனந்த சேகரன் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் முரளிடதரன் மற்றும் அனைத்து கட்சியினை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.