தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி)யில் பொருநை இலக்கியத் திருவிழா போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி)யில் பொருநை இலக்கியத் திருவிழா போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலில் வரும் ஜனவரி மாதம் பொருநை இளைஞர் இலக்கியத்திருவிழா நடைபெறஉள்ளது.

இத்திருவிழாவில் தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி மாவட்டங்களைச்சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.இவ் இளைஞர் திருவிழாவை முன்னிட்டு தூய மரியன்னை கல்லூரி தன்னாட்சியில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி,ஹைக்கூ, படத்தொகுப்பு தயாரித்தல்(Collage making)போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

முன்னதாக போட்டிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்வு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னாண்டோ,

செயலர் அருட்சகோதரி முனைவர் சி.ஷிபானா, சுயநிதிப்பிரிவு இயக்குநர் அருட்சகோதரி ஜோஸ்பின் ஜெயயராணி ஆகியோர் ஊக்குவிப்போடும், ஆசியோடும் துறைத்தலைவர் முனைவர் ந.சண்முக வடிவு (எ)சாந்தி வழிகாட்டுதலில்,

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் முனைவர் அ.ம.சோனல், செ. நவரெத்தினம் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இதில் மாணவிகள் ஆர்வத்தோடு பங்குபெற்று நம் பண்பாடு கலாச்சாரம்,தொன்மை,இன்றைய கணினி மற்றும் வலைதள பயன்பாடு,

உணவுப்பழக்க வழக்கங்கள் மற்றும் சூழலியல் விழிப்புணர்வு என பல்வேறு வாழ்வியல் நெறிகளைத் தெரிந்து கொண்டனர்.

இன்றைய இளம் தலைமுறையினர் தம் திறமைகளை வெளிப்படுத்தவும், தமிழரின் சிறப்பு மற்றும் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு அடையவும்,தம்மை செதுக்கிக்கொள்ளவும்  இப்போட்டிகள் களமாக அமைந்தது.