தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலை பள்ளியில் விழிப்புணர்வு மற்றும் மாணவிகளுக்கு தேசிய குடற்புழு நீக்கும் முகாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலை பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை மாவட்ட புகையிலை கட்டுப்பாடு மையம் சார்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
விழிப்புணர்வு மற்றும் மாணவிகளுக்கு தேசிய குடற்புழு நீக்கும் திட்டத்தின்படி இன்று மாத்திரைகள் வழங்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் மாநகரில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட பொது இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் புகையிலை சார்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று மாநகர மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, சுகாதரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன்,நகர் நல அலுவலர் மருத்துவர் தினேஷ் குமார், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் வழக்குரைஞர் ரூபன் கிஷோர் ,பள்ளி தலைமை ஆசிரியர்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.