தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தினசரி குடிநீர் வழங்க ஏற்பாடு - மண்டல அலுவலக கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தினசரி குடிநீர் வழங்க ஏற்பாடு - மண்டல அலுவலக கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.

மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன் முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மேயர் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு, மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குறைதீர்க்கும் கூட்டத்தின் வாயிலாக பொது மக்கள் தங்கள் பகுதிகளில் நீண்ட நாட்களாக முடிவு பெறாமல் இருக்க கூடிய பணிகளை மனுக்களாக அளிக்கும் பட்சத்தில் அந்த மனு மீது விசாரணை நடத்தி பணிகளை விரைந்து முடிப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து வருவதாகவும், வரும் காலங்களில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு தினசரி குடிநீர் வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல் தெரிவித்தார்.

துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.