ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை தேவை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு.

ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை தேவை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வரும் அக்கிரி பரமசிவம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று தமிழர் விடுதலைக் களம் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

தமிழர் விடுதலைக்களம் அமைப்பின் தலைவராகவும், மாண்பமை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் உள்ளேன்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் அவரது அண்ணன் தொழிலதிபர் முருகேசன் ஆகியோரை, சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களோடு தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று மக்களுக்கான பல்வேறு திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் பதிவு செய்து கோரிக்கைகளை நிறைவேற்றியும், தொகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களையும் நேரடியாக சந்தித்தும் சிறப்பாக மக்கள் பணி செய்துவருகிறார்.

அவரது அரசியல் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாமல் அவரது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலைகடத்தலில் எம்.எல்.ஏ. சண்முகையா என்பவருக்கும், அவரது உடன்பிறந்த சகோதரர் முருகேசன் என்பவருக்கும்  தொடர்பு இருப்பது போல் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு 9843739305, 8015176060 ஆகிய எண்களில் இருந்தும் வாட்ஸ் -அப் - தளங்களில் பரப்பி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, அவரது சகோதரர் முருகேசன் அவர்களது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை பரப்பி வரும் அக்ரி பரமசிவன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேபோன்று சில அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிடும் நபர்களை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் அதன் நிறுவனத் தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில் சார்பிலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ரவி தேவேந்ஞ சார்பிலும் தமிழர் உரிமை மீட்புக் களம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வேல்முருகன் சார்பிலும் 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் இருந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக சண்முகையா மக்கள் பணி செய்து வருகிறார்.

அவரது அயராத மக்கள் பணியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கடந்த ஆறு மாதங்களாக வாட்ஸ் ஆப் வழியாக அவதூறு பரப்பும் வகையில் குருஞ்செய்திகளை பரப்பி வருகின்றனர்.

ஒட்டப்பிடாரம் பகுதியில் உள்ள நபர்களை சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்புபடுத்தி இச்சம்பவத்தில் எம்.எல்.ஏ சண்முகையாவுக்கும் தொடர்பு உள்ளது என உண்மையில்லாத பொய் செய்திகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒட்டப்பிடாரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா என்பவரும், அக்ரி பரமசிவன் என்பவரும் கூட்டு சேர்ந்து கொண்டு அவதூறு செய்திகளை வாட்ஸ் ஆப் குரூப்களில் 8015176060, 9843739305 ஆகிய எண்களில் இருந்து பரப்பி வருவதாக எங்களுக்கு தெரிய வந்தது 

இது போன்று தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பொய் செய்திகளை மக்களிடையே பரப்பி அசாதரண சூழ்நிலையை உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனையை தூண்ட காரணமாக உள்ள ஒட்டப்பிடாரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா மற்றும் அக்ரி பரமசிவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.