எட்டயபுரத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி குமரன் நகர் பகுதி மக்கள் தஞ்சம் - அதிமுக நகர கழகச் செயலாளர் ராஜகுமார் நிர்வாண உதவி வழங்கினார்.

எட்டயபுரத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி குமரன் நகர் பகுதி மக்கள் தஞ்சம் -  அதிமுக நகர கழகச் செயலாளர் ராஜகுமார் நிர்வாண உதவி வழங்கினார்.

தூத்துக்குடி கடந்த டிசம்பர் 17 & 18 தேதி பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாநகரம் இன்று வரை நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 

தூத்துக்குடியில் இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி குமரன் நகர் பகுதி இருந்து வெள்ள பாதிப்பு காரணமாக எட்டயபுரத்தில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆலோசனையின் பேரில் எட்டையபுரம் அதிமுக நகர கழகச் செயலாளர் ராஜகுமார் மக்களை அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து தனது சொந்த செலவில் அவர்களுக்கு அடிப்படை தேவைகளான பாய்,போர்வை,உணவு, குடிநீர் மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கு பால், பிஸ்கட், உள்ளிட்டவற்றை பொருட்களை வழங்கினார்.

கட்சியினர் பலர் உடன் இருந்தார்.