கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி டூவீலர் மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் இளைஞர் பரிதாப பலி.

கயத்தாறு அருகே கங்கணங்கிணறு ஊரைச் சேர்ந்த விவசாயி முனியசாமி, இவரது மகன் வினோத் குமார் (23). இவர் டூவீலர் மெக்கானிக் கடையில் தினக்கூலியாக வேலைசெய்து வருகின்றார்.
இந்த நிலையில் இன்று மாலை கிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் பம்புசெட் கிணற்றில் மின் வயர் பழுதுபார்த்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.