தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் V.V.D.சிக்னல் அருகில் வைத்து மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா செயலாளர் மகேஸ்வரன் பொருளாளர் ஆனந்த பொன்ராஜ் மாநில துணை தலைவர் வெற்றி ராஜன் மகளிர் அணி ராஜம் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு, கடைகளின் வாடகை மீதான 18% வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்.

மாநில அரசு, சொத்து வரி 100% உயர்த்தி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் ஆண்டு தோறும் 6% சொத்து வரி விதிப்பதை நீக்க வேண்டும்.

வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவித்திட வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான டோல் கேட்டை தமிழகம் முழுவதும் அகற்றிட வேண்டும்.

மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும். வல்லரசாக மாறி கொண்டிருக்கும் நம்நாட்டில் கல்வியையும், மருத்துவத்தையும் அனைவருக்கும் இலவசமாக வழங்கிட வேண்டும்.

தேவை இல்லாத இலவசங்களை வழங்கி அவைகளை ஈடு செய்ய வணிகர்கள் மீது வரி சுமை, அபராதம் போன்றவற்றை விதிப்பதை நிறுத்திட வேண்டும்.

அறநிலையதுறைக்கு சொந்தமான கடைகளில் இருப்பவர்களுக்கு பல ஆண்டுகளாக பெயர் மாற்றம் செய்யாமல் உள்ளது. அவர்களுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்யவும்.

பலதலை முறைகளாக அறநிலைய துறை கடைகளில் வாடகைக்கு இருந்து வருபவர்களை காலி செய்ய சொல்வதை நிறுத்திட வேண்டும்.

சிறு மற்றும் குறு வணிகர்களின் தராசுகளை முத்திரை வைக்க GST அவசியம் என்ற நிலையை உடனே கைவிட வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்செந்தூர் ரோடு வணிகர் சங்க துணை செயலாளர் T.A.மகேஸ்வரன் சிங் நிர்வாகிகள் செந்தில், ஜெயபால், அன்புராஜ் ,மாதவன்,காளி, கனிராஜ், உள்ளிட்ட பலர் பெரும் திரளான கலந்து கொண்டனர்.