இரவில் அடிக்கல் நாட்டு விழாவா? திமுகவின் கொள்கையை மக்களிடம் புகுத்துகிறாரா? எம்பி கனிமொழி கருணாநிதி.

அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் அவர் அவர் மதத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டிடம் தொடங்கும் முன், பூமி பூஜை விதிக்குச் செல்லுங்கள். சூரியன் உதயமாகி மறைவதற்குள் நில தெய்வமான பூமி தேவிக்கு மற்ற தெய்வங்களுடன் மரியாதை செலுத்தும் ஒரு சிறப்பு சடங்கு இது. இந்த சடங்கு நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு செழிப்பையும் அமைதியையும் தருவதாக மக்கள் நம்புகிறார்கள். புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜையின் முழு யோசனையும் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுவதாகும். நிலத்தடியில் வசிக்கும் பல்வேறு உயிரினங்களிடம் நீங்கள் மன்னிப்பு கேட்பதை நோக்கமாகக் கொண்டீர்கள், ஏனெனில் கட்டுமானத்தின் போது நீங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். பூமி பூஜை விதியின் சடங்குகளுடன் அடிக்கல் நாட்டப்படுகிறது.
தூத்துக்குடியில் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் தொகுப்பை தூத்துக்குடி மக்கள் செய்தி தொடர்பு துறையின் மூலமாக செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று 24/08/23 காலை 10 மணி முதல் இரவு 8:10 வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டனர்.
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசின் முக்கிய பங்கு வகிப்பவர்கள் எம்பி,எம்எல்ஏ,மேயர், மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் அடங்குவர் அதன்படி மாப்பிள்ளையூரணி ஊராட்சி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் இரவு 7:45 மணிக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பூப்பாண்டியாபுரம் பகுதியில் இரவு 8:10 மணிக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12.30 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோக கடைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இன்று ஒரே நாளில் அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எம்பி கனிமொழி கருணாநிதியின் செயல் மக்களிடம் வரவேற்பை பெற்றாலும் மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்படும் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற்றது 2024 பாராளுமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்வு வழக்கத்திற்கு மாறாக நடைபெற நிகழ்வாக பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறி உள்ளது.
மக்கள் நலனுக்காக அரசின் திட்டத்தை செயல்படுத்தும் போது மக்களிடம் வரவேற்பை பெற வேண்டும்.இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி அரசின் திட்டமா? திமுகவின் கட்சி கொள்கையின் திட்டமா? என மக்கள் முணுமுணுக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.