தூத்துக்குடியில் சுதந்திர போராட வீரர் வீரன் சுந்தரலிங்கம் 253 வது பிறந்த நாள் - அமைச்சர்,டெல்லி பிரதிநிதி,எம்எல்ஏ,மாலை அணிவித்து மரியாதை.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரி ஊராட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் முதல் தற்கொலை படை தளபதி வீரன் சுந்தரலிங்கம் 253 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி விஜயன்,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்,மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி,ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ்,ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் கனகரத்தினம், திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிஷங்கர்,திமுக ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா,வீரன் சுந்தரலிங்கம் வாரிசு பொன்ராஜ் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர்கள் நிஷாந்தினி செல்வகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.