அமலிநகர் மீனவர் போராட்டம் 2500 மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு.

திருச்செந்தூர் அமலிநகர் மீவை கிராமத்தில் தூண்டில் பாலம் அமைக்க அரசு மானிய கோரிக்கையில் தூண்டும் பாலம் அமைக்க ரூபாய் 83 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டு ஆகியும் தூண்டில் பாலம் அமைப்பதற்குரிய பணிகள் ஏதும் நடைபெறதா காரணத்தால் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கக் கோரி அரசை வலியுறித்தி கடந்த 20.2.23 அன்று திடீரென ஊர் கமிட்டி மற்றும் மீனவ கூட்டுறவு சங்கம், ஊர் பொதுமக்கள் சார்பில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டம் நடத்தினர்.
முதல்நாள் போராட்டமாக படகுகளில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர். இரண்டாம் நாள் போராட்டமாக கடலில் இறங்கி மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். மூன்றாம் நாள் போராட்டமாக ஊர் மக்கள் 2500 பேர் அமலி அன்னை பேராலயம் பின்புறம் ஒன்றுகூடி கோஷம் போட்டு அரசுக்கு தெரியபடுத்தும் வகையில் போராடினார்கள். சுமார் 250 குடும்பங்களை சேர்ந்த 2500 மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் எங்கள் ஊரில் தூண்டில் பாலம் அமையும் வரை எங்களது போராட்டம் தொடரும் அருகில் உள்ள மீனவ கிராமமான மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டிபட்டிணம் உள்பட பல்வேறு கிராமத்தில் தூண்டில் பாலம் அமைத்து உள்ளது. ஏன் எங்கள் ஊரில் தூண்டில் பாலம் அமைக்கவில்லை. தூண்டில் பாலம் அமையும் வரை கடைசிவரை போராடுவோம் என மீனவ மக்கள் உறுதியாக உள்ளனர்.