குளத்தூர் ஊராட்சியில் 1.10-லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட் வகுப்பினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் ஊராட்சி பனையூர் கிராமம் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் ஊர் நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்கள் சார்பாக ரூபாய் 1.10-லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட் வகுப்பினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,பள்ளியின் வளர்ச்சி பணிக்காக ரூபாய் 25000-நிதி உதவிி வழங்கி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, பள்ளி தலைமை ஆசிரியை மரிய அனிதா,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், குளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி, மாவட்ட பிரதிநிதி செல்வப்பாண்டி, ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி,ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன்,இந்து நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் ஆதிமாரீஸ்வரன்,பள்ளி சங்கத் தலைவர் மாரிச்செல்வம்,கிளை செயலாளர்கள் செல்வராஜ்,ரீகன், கிளை பிரதிநிதி முத்துராஜ்,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பேச்சிமுத்து,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலஅணி அமைப்பாளர் தர்மநேச செல்வின், உட்பட ஆசிரியர் -ஆசிரியைகள் மாணவ- மாணவிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.