தூத்துக்குடியில் இருந்து புதியம் புத்தூர் செல்லும் சாலையில் மின்விளக்கு அமைத்துத் தர ஒன்றிய செயலாளர் இளையராஜா கோரிக்கை - உடனடியாக நிறைவேற்றி தந்த கனிமொழி கருணாநிதி எம்பி பயணிகள் மகிழ்ச்சி!...

தூத்துக்குடியில் இருந்து புதியம்புத்தூர் செல்லும் சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் வரும் போது புதூர் பாண்டியபுரம் பாலத்தில் இருந்து புதியம் புத்தூர் சாலைக்கு திரும்பும் பகுதியில் இருள் சூழ்ந்து இருப்பதால் பயணிகள் வழி தெரியாமல் செல்லும் சூழல் இருப்பதால் தொடர் விபத்து எற்ப்படும் வகையிலும் மேலும் சமூக விரோதிகள் இருசக்கர வாகனத்தில் செல்லும் பயணிகளிடம் செயின் பறிப்பு,பணம், செல்போன்், ஆகியவறை வழிப்பறி செய்து இருள் சூழ்ந்த பகுதியில் மறைந்து விடும் சூழல் நிலவுகிறது இது பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது
இது சம்பந்தமாக ஒட்டபிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா கவனத்துக்கு பயணிகள் கொண்டு சென்றனர்.
உடனடியாக இது சம்பந்தமாக இளையராஜா தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரை நேரில் சந்தித்து மின்விளக்கு அமைத்துத் தந்து இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட இருள் நிறைந்த பகுதியில் மின் விளக்கு அமைத்து தந்திட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
கனிமொழி கருணாநிதி எம்பி, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் கோரிக்கை மனுவினை பரிசீலனை செய்து உடனடியாக இருள் நிறைந்த பகுதியான பாலத்தில் 2 மின் விளக்குகள் அமைத்து தந்து பயணிகள் எந்த வித அச்சமும் இல்லாமல் பயணம் செய்ய மின்விளக்கு அமைத்துத் தந்த கனிமொழி கருணாநிதி எம்பி மேயர் ஜெகன் பெரியசாமி ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆகியோருக்கும் பயணிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.