தூத்துக்குடியில் ஸ்டெம் பார்க் அறிவியல் பூங்கா : பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கண்டு பயன் பெற மேயர் ஜெகன் பெரியசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெம் பார்க் அறிவியல் பூங்கா : பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கண்டு பயன் பெற  மேயர் ஜெகன் பெரியசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று ஸ்டெம் பார்க் பூங்காவில் பத்திரிகையாளர்களை சந்தித்த மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது;

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பூங்கா மற்றும் நகர் சார் கற்றல் மையம் ஸ்டெம் பார்க் பூங்கா 27000 சதுர மீட்டர் பரப்பளவில் 26.67 கோடி மதிப்பில் இந்தியாவிலேயே பெரிய பூங்கா என்ற அந்தஸ்தையும் பெற்று அமைந்துள்ளது.

இந்த பூங்காவை கடந்த அக்டோபர் மாதம் 8/10/23 அன்று அமைச்சர்கள் கே.என்.நேரு,கீதா ஜீவன்,அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்தப் பூங்காவில் கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்கள் தொடர்பான காட்சிகளை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பார்க்கும் வகையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட குறுதிரையரங்கம் 150 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இயற்பியல் உபகரணங்கள் கணித உபகரணங்கள் பொறியியல் உபகரணங்கள் மங்கள்யான் சந்திரியான் போன்ற வானவியல் சாதனங்களில் மாதிரிகள் நிறுவப்பட்டுள்ளது .

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அழிந்த பறவைகள், மரங்கள்,டைனோசர்கள், போன்றவர்களின் முழு மாதிரிகள் பொதுமக்கள் கண்டு அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களான arvr மற்றும் science on sphere அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள் அமர்ந்து சிற்றுண்டி உண்ணும் வகையில் பிரத்தியேக உணவு கூட வசதியும் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா ஒலிபெருக்கி வசதி ஆண் பெண் என இரு பாலருக்கும் தனி கழிவறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 25 முதல் வரும் நவம்பர் மாதம் 14 தேதி வரையில் இலவச பார்வையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது வரும் காலங்களில் கட்டணம் நிர்ணயம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தனை அம்சங்களை உள்ளடக்கிய இந்தப் பூங்காவை தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் வெளீர் பள்ளி மாணவ மாணவிகள் பொது மக்களும் பயன்படுத்தி பயன் பெற மேயர் ஜெகன் பெரியசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த பூங்கா காலை 10 முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்படும்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார்,3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ரெங்கசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.