தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் சமூக ஆர்வலர் அருணா தேவி ரமேஷ் பாண்டியனுக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு...!

தமிழகத்தில் வருகின்றன ஏப்ரல் 19ஆம் தேதி அன்று பாராளுமன்ற தேர்தல் 39 தொகுதியிலும் ஒரே கட்டமாக நடைபெறுகின்றது.
அந்த வகையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளராக சமூக ஆர்வலர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் போட்டியிடுகிறார் அவருக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயிகள் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.
அவர் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு முன்பாக அனைத்து வழிபாட்டு தலங்களில் வழிபாடு செய்தும் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தும் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட முடிவைதேனந்தல் ,மீனாட்சிபட்டி,மூலக்கரை,வல்லநாடு,பக்கப்பட்டி, புதுக்கோட்டை , கூட்டாம்புளி,முத்தையாபுரம் , முள்ளக்காடு, பாத்திமா நகர், கணேசபுரம் பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்றபோது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் பொன்னாடை போற்றியும் உற்சாக வரவேற்ப்பு அளித்தார்.
அவர் பொதுமக்களிடம் பேசுகையில்;
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எனக்கு கரும்பு விவசாயிகள் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால்...
1)விவசாய கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்திட மற்றும் மாத ஊதியம் வழங்கிட.
2)டிகிரி முடித்த அனைவருக்கும் அரசு பணியோ அல்லது சுய தொழிலோ தொடங்கிட.
3) மீனவ மக்களுக்கு மாத ஊதியம் வழங்குவதோடு அவர்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றிட.
4) உப்பளத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கிட.
5) டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நெசவுத் தொழில்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றிட.
6) பட்டப்படிப்பு வரை தனியார் கல்வியில் மாணவர்களுக்கு 50% வரை இலவச கல்வி கிடைத்திட.
7) 50% மதுகடைகளை மூடிட..
8) தடையின்றி 24 மணி நேரமும் குடிநீர் கிடைத்திட.
9) குளங்கள், ஏரிகள், ஆறுகள் தூர்வாரி முறையாக பராமரித்திட.
10) தரமான உலகத்தரம் வாய்ந்த சாலைகள் அமைத்திட.
11) வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தரமான மருத்துவம் முற்றிலும் இலவசமாக கிடைத்திட.
12) சூரிய ஒளி மூலம் தங்கு தடையின் மின்சாரம் வழங்கிட
13) அனைவருக்கும் சொந்தமாக இலவச வீடு கிடைத்திட.
14) பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைத்திட..
15) சுங்க சாவடி கட்டணம் முற்றிலும் ரத்து செய்திட..
16) பெண்கள் அனைத்து துறைகளிலும் சம உரிமை பெற்றிட..
17) விளையாட்டுத்துறை மற்றும் கணினித்துறை மேம்படுத்திட..
18) 55 வயதுக்கு மேட்பட்ட அனைத்து முதியோர்களுக்கும் பென்ஷன் கிடைத்திட..
19) வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட..
20) மின்சார ஊழியர்களின் கோரிக்கைகள் முழுமையாக
நிறைவேற்றிட உங்களில் ஒருவராய் உங்கள் வீட்டு பிள்ளையாய் மக்கள் பணி செய்திட எனக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற்ற ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டுக்கொண்டார்