தூத்துக்குடி மாநகராட்சி 48 வது வார்டில் மத்திய அரசு ஊழியர் காலனியில் அனுமதி இன்றி கட்டப்படும் வணிக வளாகம் அகற்ற கோரி ஜனதா தளம் (ஐக்கியம்) ஆணையரிடம் கோரிக்கை மனு.

தூத்துக்குடி 48 வது வார்டில் மத்திய அரசு ஊழியர் காலனியில் அனுமதி இன்றி கட்டப்படும் வணிக வளாகம் அகற்ற கோரி ஜனதா தளம் (ஐக்கியம்) தமிழ்நாடு சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் இடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அந்தக் கோரிக்கை மனுவில் நாங்கள் கடந்த மாதம் 9/11/2023 அன்று மாநகராட்சி ஆணையரிடம் இது சம்பந்தமாக மனு ஒன்று கொடுத்தோம். அந்த மனுவில் மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தை எந்தவொரு ஆவணமும் அனுமதியும் இன்றி தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதையொட்டி அதை மாநகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை வைத்தோம்.
ஆனால் இதுவரை மாநகராட்சி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இன்றும் அது சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு வழங்கியிருக்கிறோம் இந்த கோரிக்கை மனு மீதும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சி முன்போ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்போ ஜனதா தளம் (ஐக்கியம்) தமிழ்நாடு கட்சி சார்பாக எங்களது கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத்துவோம் என அந்த கோரிக்கை குறிப்பிட்டுள்ளனர்.