ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக தலைமை காரியாலயம் : இளையராஜா ஏற்பாட்டில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்!

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக தலைமை காரியாலயம் : இளையராஜா ஏற்பாட்டில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்!

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக தலைமை காரியாலயத்தை முப்பிலிபட்டி கிராமத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் தலைமையில் வெள்ளை நிற புறாக்களை பறக்க விட்டும் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணனுக்கு ஆள் உயர சாக்லேட் மாலை அணிவித்தும் சிறப்பாக வரவேற்பு அளித்தார் இளையராஜா.

மக்களவை பொதுத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக தலைமை காரியாலயம் திறப்பு விழா, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஊராட்சிமன்ற தலைவருமான இளையராஜா ஏற்பாட்டில் முப்பிலிபட்டி கிராமத்தில் நடந்தது. தொடர்ந்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் வரவேற்பு உரையாற்றிய ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எம்பி கனிமொழி அக்கா அவர்களை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் அதற்காக நம் கழகத் தொண்டர்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் முழு முயற்சியோடு அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு சண்முகையா எம்.எல்.ஏ தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஊராட்சிமன்ற தலைவருமான இளையராஜா முன்னிலை வகித்தனர்.  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் சிறப்புரையாற்றிய அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் நமது தளபதியாரின் தலைமையில் இந்தியா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம். எனவே நமது பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும் நமது கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் அப்படி நாம் இந்தியா கூட்டி வெல்லும் பட்சத்தில் நமது எம்பிக்கு மத்திய அமைச்சர் வழங்கி நமக்கு கூடுதல் பலத்தை அளிக்க உதவும் நமது எம்பி அவர்கள் வெற்றிக்கு நம் முழு முயற்சியோடு பாடுபட வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டேவிட் செல்வின், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் மொட்டையசாமி, அவைத்தலைவர் சுப்பிரமணியன், இளைஞரணி அனிஸ்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த தேர்தல் காரியாலயம் திறப்பு விழாவை பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த இளையராஜாவுக்கு இளையராஜா என்றால் பிரம்மாண்டம் தான் பிரம்மாண்டம் தான் இளையராஜா என்று அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.