தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் ரூ 12 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி-எம்பி கனிமொழி கருணாநிதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் ரூ 12 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி-எம்பி கனிமொழி கருணாநிதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுநீர் வடகால் பாசன பகுதியில் அமைந்துள்ள முக்கிய குளமாக கோரம்பள்ளம் குளமாக உள்ளது.நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைசியில் இந்தகுளம் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை ஒட்டி 1300 ஏக்கர் நிலரப்பளவில் விரிந்து காணப்படும் கோரம்பள்ளம் குளம் 1888ம் வருடம் ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது ஆகும். இந்த குளத்திற்கு வரும் தண்ணீரை சேமிக்கும் விதமாகவும், உபரி நீரை வெளியேற்றும் விதமாகவும் 24 கண் மதகு கொண்ட பிரமாண்ட கண்மாய் ஒன்றையும் அந்நேரத்தில் ஆங்கிலேயர்கள் கட்டியுள்ளனர். 

பின்னர் காலப்போக்கில் மதகுகள் சேதமடைந்ததால், 1967இல் இரண்டு மதகுகளை ஒன்றாக்கி 24 பெரிய மதகுகளாக மாற்றி புதுப்பிக்கப்பட்டு உள்ளது .

கோரம்பள்ளம் குளத்து பாசனத்தை நம்பி கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு, சிறுப்பாடு முதலான கிராம பகுதிகளில் வேளாண் தொழில் நடைபெற்று வருகிறது.

இப்பகுதிகளில் பெரும்பாலும் நெல், வாழைப் பயிர்களே அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் விரைவாக செல்ல முடிவதில்லை.மழை காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், வீணாக தண்ணீரை வெளியேற்றுவதும்,பயிர்கள் வெள்ளத்தில் சேதமாவதுமே தொடச்சியாக நிகழ்ந்தது. 

தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளம் குளத்தில் ரூ.12 கோடி மதிப்பில் தூர் வாரும் திட்ட பணிகளை தூங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது,அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில்,கலெக்டர் செந்தில்ராஜ்,சண்முகையா எம்.எல்.ஏ. முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கொடி அசைத்து திட்ட பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த‌ கனிமொழி; 

திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் சாதனைகளை இன்று பேசுகின்ற நிலையில் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான கோரம் பள்ளம் குளம் தூர்வாரப்படுவதற்கான பணிகள் ரூ 12 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது,மகிழ்ச்சி அளிக்கிறது 228 மில்லியன் லிட்டர் கன அளவு கொள்ளளவு இருக்கக் கூடிய குளத்தில் 2600 ஏக்கரில் விவசாய பணிகள் நடைபெறுகிறது பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளின் மகிழ்ச்சி அடையும் வகையில் சிறப்பாக பணிகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநில திமுக வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர்,தூத்துக்குடி யூனியன் துணை சேர்மன் ஆஸ்கர், முள்ளக்காடு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன செயற் பொறியாளர் மாரியப்பன் உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம்,பாஸ்டினோவினோதூத்துக்குடி ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடி,முத்தையாபுரம் முள்ளக்காடு அத்திமரப்பட்டி விவசாய சங்க தலைவர் பூபதி செயலாளர் ரகுபதி என்ற சின்னராஜ்,பொருளாளர் கந்தசாமி, கோரம் பள்ளம் விவசாய சங்க தலைவர் தனலட்சுமி சுந்தரபாண்டியன், விவசாய சங்க நிர்வாகிகள் ஜோதிமணி,அழகுராஜா, இளங்கோவன்,தானியேல்,மாநகர கவுன்சிலர் ராஜதுரை, முத்துவேல்,முன்னாள் கவுன்சிலர் குலயன்கரிசல் ஜெகன்,கூட்டுடன் காடு ஊராட்சி ஹரி பாலகிருஷ்ணன்,அத்திமர் பட்டி வசந்திபால் பாண்டியன், பொன்ராஜ்.மற்றும் நிர்வாகிகள் அதிகாரிகள் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இறுதியில் விவசாயிகள் எம்பி அமைச்சர் எம்எல்ஏ மேயர் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.