தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்- கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!.

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்- கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது இதில் 50 சதவீதம் மத்திய அரசும் 50 சதவீதம் தமிழ்நாடு அரசும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் சாலைகள் பூங்காக்கள் வணிக வளாகம் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது இதில் பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.நடைபெறக்கூடிய ஸ்மார்ட் சிட்டி பணிகள் அனைத்தும் விரைவாக முடிக்க அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கனிமொழி எம்பி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் பெரும்பாலான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது மேலும் சில பணிகள் முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தில் அனைத்து பணிகளும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் மந்தகதியில் நடந்த இந்த பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விரிவுபடுத்தப்பட்டு தற்போது முடியும் தருவாயில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தத்தார்கள் கலந்து கொண்டனர்.