ஓட்டப்பிடாரம் அருகே முடிவைத்தனேந்தலில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முடிவைத்தனேந்தல் , கட்டாலங்குளம், வர்த்தகரெட்டிபட்டி , அல்லிகுளம் , திம்மராஜபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கான
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் முடிவைத்தனேந்தல் ராஜலட்சுமி திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது.இந்த திட்ட முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
இம்முகாமில் வட்டாட்சியர் பிரபாகரன் வட்டார வளர்ச்சி அலுவலர் பானு மின்வாரிய பொறியாளர் பானு ஆதிதிராவிடர் நலத்துறை பாஸ்கர் வருவாய் ஆய்வாளர்கள் அனிதா சாந்தி கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு மாவட்ட பிரதிநிதி கணேசன் கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன் ஒன்றிய துணைச் செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன் வழக்கறிஞர் நாராயணன் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.