ஒட்டப்பிடாரம் தெய்வச்செயல் புரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் தெய்வச்செயல்புரம் கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி.சண்முகையா கலந்து கொண்டு 15 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆணையை வழங்கினார்.
இந்த முகாமில் வட்டாட்சியர் சிவகுமார் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் லிங்கராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் காந்தி கருங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி ஒன்றிய கவுன்சிலர் ராதா மாரியப்பன் தகவல் தொழில்நுட்ப அணி சஞ்சய் கிளை செயலாளர் முருகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.