உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய கேண்டீன் மூடி சீலிடப்பட்டது: உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் நடவடிக்கை.

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய கேண்டீன் மூடி சீலிடப்பட்டது: உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் நடவடிக்கை.

உடன்குடி பவர் ப்ளாண்ட் அருகே உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய கேண்டீன் மூடி சீலிடப்பட்டது: உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் நடவடிக்கை.

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்றும் எச்சரிக்கை.

உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா,  மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், ஆகியோரது வழிகாட்டுதலில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

அதன் ஒரு அங்கமாக, உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்று தொழில் புரிய வலியுறுத்தி, மாவட்ட அரசிதழ் மற்றும் தினசரி பத்திரிகைகளில் பொது அறிவிப்பு பிரசுரித்தல், பத்திரிக்கை செய்திக்குறிப்பு வெளியீடுதல், விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் உரிமம் வழங்கும் மேளா போன்றவற்றை  உணவு பாதுகாப்புத் துறையானது நடத்தி வந்தது. 

ஆனாலும், இன்னும் பல உணவுத் தொழில் சார்ந்த வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமமின்றி தொழில்புரிந்து வருவது தொடர் கதையாக உள்ளது. எனவே, வணிகர்களின் இந்த சட்ட விதிமீறலை தடுக்கும் வண்ணம், திடீர் ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை துவங்கியுள்ளது.

ஏற்கனவே கடந்த நவம்பரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிமம் இல்லாத நிறுவனங்கள் மூடப்பட்டு, உரிமம் பெற்ற பின்னர் திறக்கப்பட்டன. கடந்த புதன் அன்று தூத்துக்குடியில் ஒரு பால் ஏஜென்ஸி நிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் உத்திரவின் பேரில், உடன்குடி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் (பொ) சக்திமுருகன், இன்று (27.01.2023) உடன்குடி பவர் ப்ளாண்ட் அருகே ஆய்வு மேற்கொண்ட பொழுது, ஷபா கேண்டின் என்ற உணவகம் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. எனவே, உடனடியாக அக்கேண்டீனை மூடுவதற்கு உரிய ஆணையை மாவட்ட நியமன அலுவலரிடம் பெற்று, மேற்படி ஷபா கேண்டீனானது மூடி சீல் வைக்கப்பட்டது.

 இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். எனவே, உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமத்தினை, https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்ற பின்னரே, உணவு வணிகம் புரிய வேண்டும் என்று அறிவிக்கப்படுகின்றது.

உணவுப் பொருள் சார்ந்த வணிகர்கள் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளின் தொழில் வரி ரசீதினை மட்டும் கொண்டு உணவுத் தொழில் புரிய இயலாது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் பிரிவு 31-ன் கீழ் அனைத்து உணவு சார்ந்த வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற பின்னர்தான், உணவுத் தொழில் தொடங்க வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 இயற்கை நீதிக்குட்பட்டு அநேக விழிப்புணர்வுகளும், அறிவிப்புகளும் இதுவரை வழங்கப்பட்டுள்ளதால், இனிவரும் நாட்களில், எந்த உணவு வணிகராவது, உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவுத் தொழில் புரிவது ஆய்வின் போது கண்டறியப்பட்டால், நிறுவனம் அல்லது கடையை மூடி முத்திரையிடப்படும் என்றும்,  உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் பிரிவு 55, 58 மற்றும் 63-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

எனவே, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரியும் உணவு சம்பந்தப்பட்ட வணிகர்கள், சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமத்தினை பெற்றிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றது. 

மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் உள்ள வணிகர்களுக்குத் தான், உணவுப் பொருள் தாயரிப்பு நிறுவனங்கள் அல்லது விநியோகஸ்தர்கள் தமது தயாரிப்புகள் அல்லது பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். தவறினல், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் பிரிவு 55, 58 மற்றும் 63-ன் கீழ் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள்/விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வணிகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.