விளாத்திகுளம் அருகே மீன் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகபுரத்தில் பாம்பனில் இருந்து கேரள மாநிலத்திற்கு மீன் ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் முருகன் மற்றும் அஜொய் ஆகிய இரண்டு நபர்கள் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த விளாத்திகுளம் போலீசார் காயம் அடைந்த இருவரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.