நள்ளிரவில் துப்புரவு தொழிலாளி மீது குடிபோதையில் கார் ஏற்றி கொலை.

நள்ளிரவில் துப்புரவு தொழிலாளி மீது குடிபோதையில் கார் ஏற்றி கொலை.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கீழரதவீதியில் நள்ளிரவு துப்புரவு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வேலை செய்துகொண்டு இருந்தனர். அப்போது குடிபோதையில் காரை ஒட்டி வந்த நபர் பணியில் இருந்த பணியாளர் மீது காரை மோதினார் இதில் துப்புரவு பணியாளர் கிழே அடிபட்டு விழுந்தார். 

குடிபோதையில் கார் ஒட்டி வந்தவரை பிடிக்க அங்கிருந்தவர்கள் முயன்றபோது காரை பின்பக்கமாக வேகமாக எடுத்த போது மீண்டும் அடிபட்டு கிடந்தவர் மீது காரை ஏற்றிவிட்டு வேகமாக காரை எடுத்துக்கொண்டு தப்பி ஒடி விட்டார். 

அங்கு இருந்தவர்கள் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த பணியாளரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார் இது குறித்து போலீஸார் சி.சி.டிவி காமிரா மூலம் காரை ஒட்டியவர் யார், கார் நம்பர் ஆகியவைகளை கைப்பற்றி திருச்செந்தூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்