7 - லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம்; எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,சூரங்குடி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 - லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும்,தலைமை செயற்குழு உறுப்பினருமான மார்கண்டேயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செந்தூர்பாண்டியன்,மருதக்கனி, சூரங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் வேலுத்தாய் ராமசுப்பிரமணியன், வேம்பார் தெற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சந்திரமோகன்,ஒன்றிய துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன்,முனியசாமி, சூரங்குடி கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம்,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கனகராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் மதியழகன்,தகவல் தொழில்நுட்ப அணி பாரதிதாசன், கிளைச் செயலாளர்கள் சடையாண்டி,வெள்ளைச்சாமி, சுந்தர்,ஆறுமுகம், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் கரண்குமார், உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.