தூத்துக்குடியின் தந்தை ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திஸின் 155 வது பிறந்த நாள் விழா - அமைச்சர் ஆட்சியர் எம்எல்ஏ மேயர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த கோமான் தூத்துக்குடியின் தந்தை என்று அழைக்கப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திஸ் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு
தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ,மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் குரூஸ் பர்னாந்திஸ் சிக்னல் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர செயளாலர் ஆனந்த சேகரன் மாமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.