வ.உ.சி.பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா; ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா பங்கேற்பு.

ஓட்டப்பிடாரம் வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழா ஓட்டப்பிடார திமுக வடக்கு ஒன்றிய செயலாளரும் ஓட்டப்பிடார ஊராட்சி மன்ற தலைவருமான அ.இளையராஜா தலைமையில் பள்ளியின் தலைமை ஆசிரியை மேரி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
பள்ளி மாணவ மாணவிகள் பொங்கலிட்டு "பொங்கலோ" பொங்கல் என குலவையிட்டு தங்களது வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு கிடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஓட்டப்பிடார திமுக வடக்கு ஒன்றிய செயலாளரும் ஓட்டப்பிடாரஊராட்சி மன்ற தலைவருமான அ.இளையராஜா பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கொம்பு மகாராஜா, கால்நடை மருத்துவ ஆய்வாளர் சுப்பிரமணியன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் லாரன்ஸ், பஞ்சாயத்து துணைத்தலைவர் ஹரிஹரன், மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளியின் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.