Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு உறுதி செய்யும் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட திருத்தம்: அன்னபூர்ணா

Admin 1 week ago தூத்துக்குடி
மத்திய அரசு, நாட்டின் உள்நாட்டு அமைதி மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த திருத்தச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது
சென்னை, ஏப். 2 –
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) திருத்தம், நாட்டின் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் எந்தவித எதிர்மறை தாக்கமும் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிக்கும் முக்கியமான நடவடிக்கையாகும் என்று பாஜக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் Narendra Modi தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் உள்நாட்டு அமைதி மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த திருத்தச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த திருத்தத்தின் மூலம் வெளிநாட்டு நிதி பயன்பாட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்றும், நிதி தவறாக பயன்படுத்தப்படுவது கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் வெளிநாட்டு தலையீடு குறையும் என்றும் கூறினார்.

அதேபோல், தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அமைதி வலுப்பெறும் என்றும், நிதி பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுவதால் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்றும், சமூக சேவை அமைப்புகள் பொறுப்புடன் செயல்பட ஒழுங்கு நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு நிதி சரியான பயனாளர்களிடம் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இந்த சட்டம் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முடிவில், பொதுநலன் மற்றும் தேசிய நலனை முன்னிலைப்படுத்தி மத்திய அரசு மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து வரவேற்கப்பட வேண்டியவை என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்கான உறுதியான அடித்தளமாக இது அமையும் என்றும் அன்னபூர்ணா குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்

மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தல் - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பேச்சு

5 days ago

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பல்முனைப் போட்டி: களத்தில் முந்துகிறாரா அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ்

1 week ago

தூத்துக்குடியில் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம் - மக்கள் உற்சாக வரவேற்பு!

1 week ago

தூத்துக்குடியில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்: “ஆட்சிக்கு வந்தவுடன் ₹10,000 உதவி” – செல்லப்பாண்டியன் உறுதி

1 week ago

தூத்துக்குடியில் தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் கடும் குற்றச்சாட்டு

1 week ago

கோவில் வளாகத்தில் தெருநாய்கள் தொல்லை: ரேபிஸ் நோய் பரவும் அபாயம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்