Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

அரசு கேபிளில் இருந்து மூன்று தொலைக்காட்சிகள் நீக்கம்: உடனடியாக மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

Admin 1 week ago தூத்துக்குடி
இந்த மூன்று ஊடகங்களும் மின்வெட்டு, நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
சென்னை, ஜூன் 9:

தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர் தொலைக்காட்சி, நியூஸ் தமிழ் 24x7 மற்றும் ஜனம் தமிழ் தொலைக்காட்சி ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை காரணமாக இந்தத் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டணப் பிரச்சினைதான் காரணம் என்றால் ஏன் மற்ற தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும் மின்வெட்டு, நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதன் காரணமாகவே அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஜனநாயக அமைப்பில் கருத்து சுதந்திரமும், ஊடக சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். அரசை விமர்சிக்கும் செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களைத் தடை செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்ற நடைமுறை அல்ல.

எனவே, அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள பாலிமர் தொலைக்காட்சி, நியூஸ் தமிழ் 24x7 மற்றும் ஜனம் தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றை உடனடியாக மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

அண்ணாமலை ஒப்புதலுடன் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வி த லீடர்ஸ் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கும் முகாம்.

3 days ago

வடமாநில தொழிலாளர்கள் விவரங்களை அரசே கண்காணிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

4 days ago

தூத்துக்குடி உப்பளத் தொழிலை முதல்வர் ஜோசப் விஜய் பாதுகாப்பார்: உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை கனிமொழி எம்.பி.க்கு கண்டனம்

4 days ago

தூத்துக்குடி மாவட்ட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

6 days ago

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சிப்காட் சங்கரலிங்கம் தலைமையில் நடந்த ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

6 days ago

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வென்று மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலினை அரியணை ஏற்றுவோம் அமைச்சர் கீதா ஜீவன்

4 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்